கர்த்தருடைய வார்த்தை கண்களைவிட்டு பிரியக்கூடாது

விசுவாசத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் நம்முடைய கண்கள் தேவவசனத்தை நோக்கி பார்க்க வேண்டும். நம் கண்கள் வசனத்தை நோக்கி பார்த்துக் கொண்டு இருப்பதற்கு வீடுகளில் வார்த்தைகளை வாங்கி தொங்க விடுகின்றோம். கர்த்தர் நமது வாழ்க்கையில் ஆவிக்குரிய ஆசிர்வாதத்துக்காய் தரும் வார்த்தைகளை தொங்கவிட வேணடும். நம் வீடு முழுவதும் கர்தருடைய வார்த்தை நிரம்பி இருக்க வேண்டும். உங்களுக்கு விசுவாசம் வேண்டும் என்றால், நீங்கள் விசுவாசத்தை கண்டடைய வேண்டும் என்றால், உங்கள் கண்கள் கர்த்தருடைய வார்த்தையை நோக்கி பார்க்க வேண்டும்.

தலைக்கு மேலே பறவை பறப்பதைதடுக்க முடீயாது. ஆனால் அப்பறவை உன் தலையில் முட்டையிட்டு குஞ்சு போரிக்க இடங்; கொடுக்காதே. உன் கண்களில் அசுத்த காட்சி பட்டுவிட்டால் இயேசுவின் இரத்தம் என்று சொல்லி ஜெயம் பெறவேண்டும். அப்போது உன் கண்ணில் அசுத்தமிருக்காது. உன் கண் தெழிவாயிருந்தால் உன் உடல் முழுவதும் வெளிச்சமாய் இருக்கும் என்று ஆவியானவர் சொல்கிறார். உன் கண் அசுத்தமாயிருந்தால் உன் சரிரமுழுவதும் இழைப்பாயிருக்கும்.

ஆகவே உன்னில் உள்ள வெளிச்சம் இருளாய் போகாதபடீ உன் கண்கள் பரிசுத்தமாய் இருக்கட்டும். சாத்தான் இன்னாட்களில் அனேகரின் கண்களை தம்பக்கம் திருப்புகிறான். அப்படீப் பட்டவர்களின் கண்களில் பரிசுத்தம் இருக்காது. அவர்களுடைய கண்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு நேரே திரும்பாது. நித்திரையின் ஆவியால் சிறைப்படுத்தப்படும். கர்த்தருடைய வார்த்தை உன் கண்கள் விட்டு பிரியாதிருக்கட்டும்.

விசுhசத்தை பெற்றுக் கொள்ள தேவ வசனத்தை நீங்கள் அசை போடுங்கள். அந்த வார்த்தையில் உள்ள ஜீவன் உங்களுக்கு ஜீவன் கொடுக்கும். அந்தவார்த்தை வல்லமையானது உங்கள் சரீரம், ஆத்துமாவிலே வல்லமை கொடுக்கும். இவற்றை கண்டுபிடீப்பவர்களுக்கு வார்த்தையோ ஜீவனும் உடலுக்கு ஆரோக்கியமும் கொடுக்கும். இவ்விதமாய் வார்த்தையை பயன்படுத்துவோம். விசுவாசத்தை வளர்ப்போம்.

(நீதி 4:20-23) என் மகனே என் வார்த்தைகளைக்கவனி, என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்ணை விட்டுப் பிரியக்கூடாது அவைகள் உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.

பரிசுத்தஆவிதான் இந்த ஜீவ ஊற்று. கர்த்தருடைய வார்த்தை வெளிப்பாடாகிய விசுவாசமாகும். அந்த விசுவாசத்தை உண்டாக்குவதுதான் கர்த்தரால் தீர்க்கதரிசனம் உரைப்போருடாக பேசப்படுகின்றவார்த்தை. இவை ஆவியால் பேசப்படும் வார்த்தைகளாகும். வாக்குத்தத்தங்கள் நமக்குள் விசுவாசத்தை உண்டாக்கும். அந்த விசுவாசம் நம் சரீரத்திலும் வாழ்விலும் அற்புதம் செய்யும்.

 

நம் வார்த்தை செய்யும் அற்புத காரியங்கள்.

ஆசீர்வாதம் பெறல். - ஆகாய் 2:19, உபாக1:11

நான் இன்று முதல் உங்களை ஆசீர்வகிப்பேன்.

நீங்கள் இப்போது இருப்பதை பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

பிளைக்கவைக்கும் - மத் 4:4

அற்புதம்நடக்கும் - லூக் 1:28

வெறுமைமாறும் - லூக் 5:5

உம்முடைய வார்த்தையை நம்பி வலையைப் போடுகிஆறாம்.

விசுவாசமுண்டாகும் - ரோ 10;:17

விசுவாசம் கேள்வியினால் வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினால் வரும்.

சிந்தையில் பரிசுத்தமுண்டாக - எசா 55:8,3

கர்த்தருடைய வார்த்தை நம் கண்களை விட்டு பிரியாதிருப்பதுமட்டுமல்ல அவைகளை நம் இதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இருதயத்தில் அந்ந வசனத்தை அப்படியே மனப்பாடம் பண்ண வேண்டும். மனப்பாடம் பண்ணிய வார்த்தையை மனப்பாடம் பண்ணின வார்த்தையை சொல்லிச்சொல்லிப் பார்க்க வேண்டும். வார்த்தையை அசை போடவேண்டும். (சங் 1:2) கர்த்தருடைய வார்த்தையில் பிரியமாய் இருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாய் இருப்பவன் பாக்கியவான்.

பசுவை பாருங்கள் புல்லுள்ள இடங்களில் வேகமாக புல்லை உண்டு பின் அது படுத்திருக்கும் போது இரைமீட்கிறது. பின் உணவு ஜீரணம் அடைந்து இரத்தத்துடன் கலந்து உடலுக்கு வலு அளிக்கிறது. அதேபோல் கர்த்தருடைய வசனம் இரத்தத்துடன் இரத்தமாக வாழ்வோடு வாழ்வாக கலந்து விடவேண்டுமானால், வார்த்தையை வாசித்து மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து தியானிக்க வேண்டும். வேலை செய்யும் போதோ வெளியில் நடக்கும் போதோ வார்த்தையை அசைபோட வேண்டும்.

வார்த்தைகளை உங்கள் நாவால் சொல்ல ஜீவன் உண்டாகும். தேவனுடைய வார்த்தையில் ஜீவன் இருக்கிறது. (எபிரே 4:12) கர்த்தருடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது, இருபுறமும் கூர்மையான வாழ் போன்றது. ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்கு குத்தி ஊடுருவும். என்புமூட்டையும் மச்சையையும் ஊடுருவுகிறது. உள்ளத்தின் சிந்தனைகளையும், நோக்கங்களையும் சீர்தூக்கிப்பார்க்கிறது.

(தொடரும்.)

VIIRASEENAI PRAYER GROUP
107, NEWCHETI ROAD
COLOMBO 13 
SRI LANKA

நம்மயேசுப்பத்திரிகை.

 

இவ் இணையம் பற்றிய உங்களது கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.   

 

About Us      Good News      Activity      Contact Us      Witness      Home
Design by Alan Navaratnam, Sillalai, Sri Lanka